மண்ணச்சநல்லூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு மற்றும் நாளை வளர்பிறை முகூர்த்தம் என்பதால் நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்சி நோக்கி வந்த வாகனங்கள் சமயபுரம் சுங்கச்சாவடியில் அணிவகுத்து நின்றன.திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடியில் நேற்று கார்கள் அணிவகுத்து சென்றன. இன்று (ஆகஸ்ட் 30ம் தேதி) ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை வளர்பிறை முகூர்த்தம் என்பதால் சென்னையிலிருந்து கார்கள் அணிவகுத்து சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல மணி நேரம் காத்திருந்து சென்றன வாகனங்கள். இதுகுறித்து சென்னை கிண்டியைச் சேர்ந்த கிஷோர் (40) என்பவர் கூறும்போது, தூத்துக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக சென்னையிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டோம். ஆனால் வரும் வழியில் அனைத்து சுங்கச் சாவடிகளில் 20 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை காத்திருந்து பின்னரே செல்ல நேரிட்டது.