குஜிலியம்பாறை:குஜிலியம்பாறையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அப்பகுதி குடியிருப்பு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆபத்தான கட்டிடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குஜிலியம்பாறை பகவதியம்மன் கோவில் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து அரசு குடோன் கட்டிடம் கட்டப்பட்டது. இதில் ஒரு கட்டிட அறை நூலகத்திற்கு பயன்பாட்டில் இருந்து வந்தது. போதிய பராமரிப்பு இன்றி இருந்ததால், நாளடைவில் கட்டிடங்கள் விரிசல் விட தொடங்கியது.பின்னர் அங்கிருந்த கிளை நூலகம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய நிர்வாக பயன்பாட்டில் இருந்து வந்தது. கட்டிடங்கள் இடிந்தவாறும் பழுந்தடைந்த நிலையில், காணப்பட்டதால் அலுவலக பயன்பாட்டை தவிர்த்தனர்.