தஞ்சை: தஞ்சை அருகே வீட்டை ஏலம் விடுவதாக வங்கியாளர்கள் மிரட்டியதால் தீக்குளித்த வாலிபர் உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தஞ்சை அருகே வல்லம் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(40). வெல்டரான இவர், வல்லத்தில் உள்ள தனியார் வங்கியில் ரூ.9லட்சம் வீட்டு கடன் வாங்கியிருந்தார். இதுவரை ரூ.13 லட்சம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் மேலும் ரூ.6.50 லட்சம் செலுத்த வங்கியாளர்கள் இவருக்கு நோட்டீஸ் அனுப்பி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஆனந்த், வங்கிக்கு சென்று மேலாளரை சந்தித்து பேசினார். அப்போது வங்கி மேலாளர், மேலும் செலுத்த வேண்டிய ரூ.6.50 லட்சத்தை உடனே செலுத்துமாறும், இல்லையென்றால் வீட்டை ஏலம் விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.