சென்னை: தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு கட்டாயத்தால் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்படுவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2015ம் ஆண்டில் 478 பள்ளிகளும், 2017ல் 360 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் மூடுவிழா கண்டுள்ளன. தனியார் மட்டுமின்றி அரசு பயிற்சி நிறுவனங்களும் இதில் அடங்கும். இதற்கு 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கையை கொண்ட பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் பிறப்பித்த உத்தரவே காரணமாகும்.
தமிழ்நாட்டில் மூடுவிழா காணும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள்!: தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வே காரணம்..!!
- ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் நிறைவு விழா
- ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்
- தமிழ்நாடு
- தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள்
- மூடு