சென்னை : வணிகரீதியாக தமிழ்நாட்டிற்கு வருவோருக்கு உடனடி இ - பாஸ் வழங்கப்படும் என்றும் அவர்கள் 3 நாட்களில் வெளியேறுவதாக இருந்தால் தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ - பாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, இ -பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டது. இருப்பினும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே மக்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதனிடையே கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண இ - பாஸ் அவசியம் என நேற்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் இ-பாஸ் தொடரும் என்பதையே அவர் இப்படி சூசகமாக கூறியுள்ளதாக தெரிகிறது.