நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சியில், கொரோனா தடுப்பு பணிகளுக்கான பொருட்கள் வாங்கியதில், ஒரு கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கொரோனா பரவி வரும் சூழலில், அதனைவிட கொடூர வைரஸ்கள் மக்களை தினந்தோறும் வாட்டி வருகிறது. அதாவது கொரோனா வைரஸை காரணங்காட்டி, பல மருத்துவமனைகளில் தொற்று பரவியதாக கூறி போலியான முறையில் சிகிச்சையளிக்கப்பட்டு, பணம் பறிக்கப்பட்டு வருகின்றன. வேறு சில இடங்களில் கொரோனா நிவாரண பொருட்களாக தரமற்றவற்றை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து தற்போது நெல்லையில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டதில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஜின்னா என்பவர் மீதுதான் இந்த புகார் எழுந்துள்ளது.