திருச்சி : உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் உடல்நலக்குறைவால் காலமானார். திருச்சி தனியார் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. சட்ட ஆணைய தலைவராகவும் முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இருந்தவர் ஏ.ஆர்.லட்சுமணன்.பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தவர் இவர் ஆவார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு வயது 78. இவருக்கு மீனாட்சி ஆச்சி என்ற மனைவியும் ஏ.ஆர்.அருணாச்சலம், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் என்ற இரு மகன்களும், உமையாள், சொர்ணவள்ளி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். அதில், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் சீனியர் வக்கீலாகவும், சென்னை பார் அசோசியேசன் தலைவராகவும் உள்ளார்.