நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமுக்கு பாகிஸ்தான் நடிகையுடன் நெருங்கிய நட்பு இருப்பதாக தகவல்..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிம் அந்நாட்டில் கவர்ச்சி நடிகை மெஹ்விஷ் ஹயாத்துடன்  நெருங்கிய நட்பில் இருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1993ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் தேடப்படும் குற்றவாளி தாவுத் இப்ராஹிம். தலைமறைவான இவர் பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசிப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் திரையுலகில் முக்கிய சக்தியாகவும், பல நடிகைகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தான் திரையுலகின் ஒளிரும் கவர்ச்சி தாரகையான மெஹ்விஷ் ஹயாத் என்ற நடிகையுடன் தாவுத்துக்கு அந்தரங்க தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஐட்டம் நம்பர் 1 திரைப்படத்தில் மெஹ்விஷ் ஹயாத்தின் கவர்ச்சி நடிப்பால் கவர்ந்து இழுக்கப்பட்ட தாவுத், அவருடன் நெருங்கிய நட்பை வளர்த்து கொண்டுள்ளார். தாவுத் நட்பு கிடைத்ததை அடுத்து, பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக ஹயாத் வலம் வந்தார். கடந்த ஆண்டில் அவருக்கு பாகிஸ்தானில் உயரிய விருதுகளில் ஒன்றான தம்கா-இ-இம்தியாஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது அந்நாட்டு திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் ஆளும் கட்சிக்கு நெருக்கமான கராச்சி பிரமுகர் இருப்பதாக அப்போது ஊடகங்களில் செய்தி வெளியானது. அது தாவுத் இப்ராஹிம் தான் என்பது பின்னர் அம்பலமானது. மும்பையில் தாதாவாக வலம் வந்த கால கட்டத்தில் பாலிவுட் நடிகைகள் பலருடன் தொடர்பில் இருந்தவர் தாவுத். நடிகைகளுடன் நட்பில் திளைப்பதை வழக்கமாக கொண்டவர் என்பதே அவரின் கடந்தகால கதை. தற்போதும் பாகிஸ்தான் திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் அவரது ஆதிக்கம் இருப்பதாகவே கூறப்படுகிறது.

Related Stories: