பெர்லின்: ரஷ்ய நாட்டு எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ஜெர்மனி தெரிவித்துள்ளது. ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. இவர் விளாடிமின் புதினை எதிர்த்து அதிபர் தேர்தலில் நிற்க முயன்று பின்னர் தடைவிதிக்கப்பட்டவராவார். தேர்தலுக்கு பிறகும் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த நவால்னி, விமான பயணத்தின் போது திடீரென சுயநினைவு இழந்து கோமா நிலைக்கு சென்றார். தேநீரில் விஷம் கலந்து நவால்னியை கொல்ல ரஷ்ய அதிகாரிகள் சதித்திட்டம் தீட்டியதாக பரவலாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெர்கலும் தலையிட்டதால் நவால்னியை சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு அனுப்ப ரஷ்ய அரசு அனுமதி அளித்தது.