பெங்களூரு: மத்திய அரசின் வழிக்காட்டுதலின்படி கர்நாடக மாநில அரசு இ-பாஸ் முறையை ரத்து செய்துள்ளது. மேலும் இடம்பெயர்வோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் கைவிட்டுள்ளது. இது குறித்து, கர்நாடக மாநில அரசின் குடும்பம் மற்றும் சுகாதார துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜாவித் அக்தார் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலத்திற்கு வெளி மாநிலத்தில் இருந்து வருகிற நபர்கள் சேவா சிந்து என்ற செயலியில் பதிவு செய்து இ-பாஸ் பெற வேண்டும், விமானம் மற்றும் ரோடு வழியாக வந்தால் மருத்துவ பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும், மாநில எல்லைகளில் வாகனங்களை பரிசோதித்தல், இடம் பெயர்வோர் கையில் முத்திரை குத்தப்படுவது,தனிமைப்படுத்தபடுவோர் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படுதல்,14 நாள் தனிமையில் இருப்பது உள்ளிட்ட 7 விதிமுறைகள் கட்டாயம் ஆகும். இந்நிலையில் மத்திய அரசின் புதிய வழிக்காட்டுதலின்படி தற்போது நடைமுறையில் இருக்கிற அனைத்து விதிகளும் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன.