மெரினாவில் போராட்டம் 3 வக்கீல்கள் கைது

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களான ஏ.பி.சூர்யபிரகாசம், தி.சிவஞானசம்பந்தன், எம்.எல்.ரவி ஆகியோர் நேற்று மதியம் 12 மணிக்கு மலர் வளையம் வைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்ற பதாகையுடன் கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த மெரினா போலீசார் 3 மூத்த வழக்கறிஞர்களை கைது செய்தனர்.

Related Stories: