திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சொப்னாவுக்கு, கேரள அரசும், ஐஎஸ்ஆர்ஓவும் இணைந்து நடத்தும் விண்வெளி பூங்கா திட்டத்தில் செயலாக்க மேலாளராக வேலை கிடைத்தது. அப்போது ஐடி துறை செயலாளராக சிவசங்கர் இருந்தார். இந்த நிலையில், சொப்னாவும், சிவசங்கரும் சேர்ந்து விண்வெளி ஆய்வு மைய ரகசியங்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக, மலையாளத்தில் வெளிவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகை பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்தில் விண்வெளி பூங்கா திட்டத்துக்காக கேரள அரசும், ஐஎஸ்ஆர்ஓவும் ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.