பியோங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருப்பதால் அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கியிடம் அதிபர் பொறுப்புகளை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தகவலை தென்கொரியாவின் மறைந்த முன்னாள் அதிபர் கிம் டே ஜங்கின் உதவியாளர் சாங் சாங்- மின் வெளியிட்டுள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து அதிபர் கிம் ஜாங்கின் தேசிய மற்றும் சர்வதேச பொறுப்புகள் அனைத்தும் இளைய சகோதரியான கிம் யோ-ஜாங்யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சாங் சாங்- மின் குறிப்பிட்டுள்ளார். வடகொரியா அதிபர் கிம்முக்கு சமீபத்தில் மிக சிக்கலான இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்கு பிறகு கிம் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், பொது நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற காட்சிகள் வெளியாகின. ஆனால் வடகொரியா அரசு வெளியிட்ட அனைத்து படங்களும், காணொலிகளும் போலியானவை என்று தென்கொரிய புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனனர்.