கோவை: கோவையில் போலி ஆவணம் மூலம் மகனே ஒரு ஏக்கர் நிலத்தை அபகரித்துக்கொண்டு மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி புகாரளித்துள்ளார். பணம் நம் கையில் இருந்தால் அனைத்தையும் பெற்று விடலாம் என்ற எண்ணம் தற்போது அனைவரது மனதிலும் ஆழமாக பதிந்து வருகிறது. ஆதலால் இதுவரை சொத்து பிரச்சனையால் பல்வேறு குடும்பங்கள் பிரிந்துள்ளனர். இந்நிலையில் மனிதாபிமானத்தை இழந்த சில மானிட பிறவிகள் சொத்தாக கருதக்கூடிய தாயிடமிருந்தே சொத்துகளை அபகரித்து கொள்ளும் அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதாவது, கோவை மாவட்டம் சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமாத்தாள். 90 வயதான இவரை அவரது இளைய மகனான சின்னராஜ் என்பவர் கவனித்து வருகிறார்.