திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அருகே உணவகம் ஒன்றில் சாப்பிட்ட உணவிற்கு பணம் கேட்டதால் பெண் ஒருவரை சிலர் சரமாரியாக தாக்கும் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஊரடங்கு காலத்தில் அனைத்து மக்களும் பொருளாதாரரீதியாக கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாகியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு இன்னல்களுக்கிடையில் உணவகங்களை நடத்தி வரும் சில உரிமையாளர்களின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. அதாவது திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அருகே சாப்பிட்ட உணவிற்கு பணம் கேட்டதால், சில இளைஞர்கள் பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர்.