கடலூர்: கடலூர் மாவட்டம் பட்டாப்பக்கம் அருகே லாரி மோதி விவசாய தம்பதி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடலூர் மாவட்டம் பட்டாப்பக்கம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவரது உறவினர் திருமணம் இன்று புதுச்சேரி கிராமப்பகுதியான வடக்குப்பத்தில் நடைபெற்றது. இதில் மனைவி பானுமதியுடன் பங்கேற்பதற்காக தனது மோட்டார் வாகனத்தில் சக்திவேல் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு திருமண நிகழ்ச்சி முடித்துவிட்டு தனது மனைவி பானுமதியுடன் சொந்த ஊரான கடலூருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நெட்டப்பாக்கம் கல் மண்டகம் அருகே இருக்கும் தனியார் தொழிற்சாலை அருகே சென்று கொண்டிருக்கும் போது அவர்களது பின்புறம் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கீழே விழுந்த சக்திவேல் மீது லாரி ஏறி, இறங்கி அவர் சம்பவ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.