மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் சித்த மருத்துவத்தை மத்திய அரசு பார்ப்பது வேதனை அளிக்கிறது : திருத்தணிகாசலம் மீதான வழக்கில் நீதிபதிகள் கருத்து!!

சென்னை : மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் சித்த மருத்துவத்தை மத்திய அரசு பார்ப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பிற மருத்துவமுறைகளை விட சித்த மருத்துவத்திற்கு குறைந்த நிதி ஒதுக்கியது துரதிர்ஷ்டவசமானது என்றும் ஆயுஷ் அமைச்சக பெயரில் இருந்து சித்த மருத்துவத்தை குறிப்பிடும் எஸ் என்ற எழுத்தை நீக்கிவிடலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார். சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்து குறித்து மத்திய அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: