வாடிகன்: பணக்கார நாடுகள், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பதுக்கி வைக்கக் கூடாது என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகம் முழுவதும் பெரிதாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. இதற்கான தடுப்பு மருந்து கண்டறிவதும் சோதனை அளவிலேயே இருக்கின்றன. ஆனால், ரஷ்யா மட்டுமே இதுவரை கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து வாடிகன் தேவாலயத்தில் பொதுமக்களுக்கு ஆற்றிய உரையில் பேசிய போப் பிரான்சிஸ், கொரோனா தடுப்பூசி போடுவதில் பணக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலோ அல்லது அந்தத் தடுப்பூசி ஒரு நாட்டின் தனிச்சொத்தாக மாறினாலோ, இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயங்கள் என தெரிவித்துள்ளார்.