மாஸ்கோ: கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ள ரஷ்ய தரப்புடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கமலையா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி ஸ்பூட்னிக் - வி என்ற தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்திய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், தனது மகளுக்கு அதனை செலுத்தி இருப்பதாக தெரிவித்தார். இதனை உலகளவில் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் - வி கோவிட் தடுப்பு மருந்து மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.