நாட்டின் பிரதமர், வேந்தராக பொறுப்பு வகிக்கும் புகழ்பெற்ற விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தை உள்ளூர் மக்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு!!

கொல்கத்தா : நாட்டின் பிரதமர், வேந்தராக பொறுப்பு வகிக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தை உள்ளூர் மக்கள் அடித்து நொறுக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் கடந்த சில வாரங்களாக புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் உள்ள கண்காட்சி மைதானத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டப்படுவதாக உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், விஷ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் திரண்ட நூற்றுக்கும் அதிகமானோர் கட்டுமான பொருட்களை தூக்கி எரிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பல்கலைக்கழகத்திற்குள் ஜேசிபி இயந்திரத்துடன் புகுந்தவர்கள் அங்கிருந்த நினைவுச் சின்னங்களையும் இடித்து தள்ளினர்.

Related Stories: