திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சேப்பாக்கம் ஜெகதீசன் மறைவு: மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: சேப்பாக்கம் முன்னாள் திமுக பகுதிச் செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினரும், கலைஞர்- திமுக தலைவர் மீது மிகுந்த பற்று கொண்டிருந்த வரும், ‘கலைஞர் விருது’ பெற்றவருமான ஏ.கே.ஜெகதீசன் (91) உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை அப்பாவு கிராமணி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெகதீசன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் ஜெகதீசனை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

அப்போது நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, திமுக வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொடர்ந்து, ஜெகதீசன் உடலுக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

Related Stories: