புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (84) உடல்நலக்குறைவால் டெல்லியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பும் உறுதியானது. மூளையில் ரத்தக்கட்டு இருந்ததால் அதனை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றினர். இதனால், அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை தனது வீட்டில் பிரணாப் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இம்முறை, அவர் மருத்துவமனையில் இருப்பதால் அதை தவற விட்டுள்ளார்.