கோவை: கோவையில் ஆன்லைனில் கல்வி கற்க பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். கோவை உடையாம்பாளையம் அருகேயுள்ள திருமலை நகரை சேர்ந்தவர் முருகானந்தம். கூலி தொழிலாளி. இவர் மகள் ஸ்நேகா (15). தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு ஆன்லைன் வகுப்பில் கல்வி கற்க பள்ளி கட்டணம் செலுத்துமாறு பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இந்த தகவலை ஸ்நேகா தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.