சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் நாளை விடுமுறை

காஞ்சிபுரம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு, மதுபானக்கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர்கள் காஞ்சிபுரம் பொன்னையா, செங்கை ஜான்லூயிஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள், வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள், அதனுடன் இணைந்த பார்கள், அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், தனியார் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை அனைத்தும் மூடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: