அரசு மருத்துவமனைக்கு வென்டிலேட்டர்கள்: எஸ்பிஐ வழங்கியது

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எஸ்பிஐ பவுண்டேஷன் சார்பில் 4 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் வென்டிலேட்டர்கள் சிறந்த பங்காற்றி வருகிறது. இந்நிலையில், எஸ்பிஐ பவுண்டேஷன் சார்பில் 4 வென்டிலேட்டர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி, மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், எஸ்பிஐ பொது மேலாளர் ஷெர்லி தாமஸ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் பலராமனிடம் வழங்கினார். அப்போது, துணை பொது மேலாளர் சத்யா பிரகாஷ் உடன் இருந்தார்.

Related Stories: