மதுரை: தென்காசி விவசாயி அணைக்கரை முத்துவின் வழக்கு விசாரணை ஆக.7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முத்துவின் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவருக்கு கொரோனா தொற்றால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு பிரேதப் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் உயர்நீதிமன்ற கிளையில் அவகாசம் கோரப்பட்டது. விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அணைக்கரை முத்து போலீஸ் தாக்கியதில் உயிரிழந்ததாக மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார்.