திருச்சி: கொரோனா ஊரடங்கால் திருவிழாக்கள் நடக்காததால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நேற்று பரிகார பூஜைகள் நடந்தது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகளின் உத்தரவின்படி ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பெரிய கோயில்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நித்தியப்படி கால பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. பங்குனி தேர் திருவிழா (ஆதி பிரம்மா திருநாள்), சித்திரை தேர் திருவிழா (விருப்பன் திருநாள்) பெருமாள், தாயார் கோடை திருவிழா மற்றும் பெருமாள், தாயார் வசந்த உற்சவ நாட்கள் ஆகியவை நடைபெறவில்லை.
கொரோனா ஊரடங்கையொட்டி திருவிழாக்கள் தடைபட்டதால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பரிகார பூஜைகள்: பக்தர்கள் அனுமதியின்றி நடந்தது
- பக்தர்கள்
- கொரோனா
- பரிகாரா பூஜைகள்
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில்
- திருவிழாக்கள்
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில்