ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த மாணவர்களின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

பெரம்பூரை சேர்ந்த ஸ்டீபன், கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த விக்னேஷ், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், சேலம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் ஆனந்த் ஆகிய நால்வரும் வோல்காகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தனர். அங்குள்ள வோல்கா ஆற்றில் குளித்த சம்பவத்தில் ஒருவரை காப்பாற்ற முயன்று நான்கு பேர் இறந்தனர். அவர்களது பெற்றோருக்கு இந்த செய்தி எந்த அளவுக்கு பேரிடியாக அமைந்திருக்கும் என்பதை உணர முடிகிறது. அவர்களின் துயரத்தை பாமக பகிர்ந்து கொள்கிறது. இறந்த தமிழக மாணவர்களின் உடல்களை உடனடியாக தமிழகத்துக்கு கொண்டு வர மத்திய வெளியுறவு அமைச்சகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: