சென்னை: கடந்த சில வாரங்களுக்கு முன்பு வானவெளியில் நியோவைஸ் என்னும் வால் நட்சத்திரம் தோன்றியது. இந்த வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற குப்பை போன்ற கற்கள் தற்போது வான்வெளியில் மிதந்தபடி இருக்கின்றன. இந்த விண்கற்களை இன்று நள்ளிரவு வான்வெளியில் பார்க்கலாம் என்று இயற்பியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். கோடை காலத்தின் பிற்பகுதியில், வெப்ப நிலை மாற்றத்தால் உருவாகியுள்ள விண்கல் பொழிவாக இது இருக்கும். பொதுவாக, வான் வெளியில் வியாழன் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு இடையில் மிதக்கின்ற விண்கற்கள், பூமியை நோக்கி வரும். அப்போது அவை பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழைந்தவுடன் ஒரு மோதல் அல்லது உராய்வு ஏற்படும். அப்போது அந்த விண் கல் தீப்பற்றி எரிய தொடங்கும். அதனால் எரிகல் பூமியில் விழுவது போன்ற தோற்றம் தெரியும்.