அரசியல் கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடர்ந்து முன்னிலை: டிடிவி பின்னடைவு May 02, 2021 அமைச்சர் கடம்பூர் ராஜா கோவில்பட்டி டிடீவி கோவில்பட்டி அமாம்பாக்கம் பொது டி.டி.வி.தீனகரன் தின மலர் கோவில்பட்டி: கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை விட 1,578 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும், அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூம், தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சீனிவாசனும் போட்டியிட்டனர். தொடர்ந்து வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.அதில் முதல் சுற்றின் முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ2,607 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். டி.டி.வி. தினகரனுக்கு 2,183 ஓட்டுகள் கிடைத்து இருந்தது. இதன் மூலம் டி.டி.வி. தினகரனை விட சுமார் 424 வாக்குகள் அதிகம் பெற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் உள்ளார். கம்யூனிஸ்டு வேட்பாளர் சீனிவாசனுக்கு 1,485 ஓட்டுகளும், நாம் தமிழர் வேட்பாளர் கோமதிக்கு 359 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கதிரவனுக்கு 92 வாக்குகளும் கிடைத்து இருந்தது. 2-வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 1,888 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். 3-வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 1,513 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். 5-வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் டி.டி.வி. தினகரனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அந்த சுற்றின் முடிவில் 19 வாக்குகள் மட்டுமே அமைச்சர் கூடுதலாக பெற்றிருந்தார். 7-வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 1,578 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். … The post கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடர்ந்து முன்னிலை: டிடிவி பின்னடைவு appeared first on Dinakaran.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நலனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
சொன்னதை செய்வோம்- செய்ததை சொல்வோம்’ என்பது கலைஞரின் கொள்கை முழக்கம்; சொல்லியதை மட்டுமல்ல – சொல்லாததையும் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: சிறப்பான திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது
போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரிப்பு; காரணங்களை அரசு கண்டறிய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
அரசின் திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது! மக்களின் வாழ்வாதாரமும் உயர்கிறது!! : திமுக பெருமிதம்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மனித மிருகங்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் :அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத்தில் 6 மாதங்களில் 8 உயிர்கள் பலி.. தமிழக அரசு நடவடிக்கை எடுத்திடுக : ராமதாஸ் வலியுறுத்தல்
உளவுத்துறையின் ரிப்போர்ட்டால் அதிர்ச்சி; பாஜ தோல்வி பயத்தால் கலவரம் செய்ய முயற்சி: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு