ஒரே நாளில் 62,538 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது: இதுவரை 41,585 பேர் பலி.!!!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20.27 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 13.78 லட்சத்தை தாண்டியது. நாட்டில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 62,538 பேர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 20,27,074 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,07,384 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,13,78,105 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 886 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 41,585 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 67.98% ஆக உயர்ந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 2.05% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் விகிதம் 29.96% ஆக உள்ளது. 

மாநிலங்கள் வாரியான விவரம்!!

*மகாராஷ்டிராவில் நேற்று 11,514 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,79,779 ஆகி உள்ளது. நேற்று 316 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,792 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 10,854 பேர் குணமடைந்து மொத்தம் 3,16,375 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 1,46,612 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*தமிழகத்தில் நேற்று 5,684 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,79,144 ஆகி உள்ளது  இதில் நேற்று 110 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,571 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,272 பேர் குணமடைந்து மொத்தம் 2,21,087 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 53,486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*டெல்லியில் நேற்று 1,299 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,41,531 ஆகி உள்ளது இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,059 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1008 பேர் குணமடைந்து மொத்தம் 1,27,124 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 10,348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: