பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும் அவர் சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவலை அவரது தரப்பினர் முதலில் மறுத்தனர். பின்னர் இது பற்றி எஸ்.பி.பி. வெளியிட்ட வீடியோவில் கூறும்போது, லேசான காய்ச்சல், சளி காரணமாக கடந்த ஓரிரு தினங்களாக சிரமம் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் வந்தது. லேசான அறிகுறிகளே இருப்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என டாக்டர்கள் கூறினர். ஆனாலும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற முடிவு செய்தேன். இப்போது நன்றாக இருக்கிறேன். விரைவில் வீடு திரும்புவேன்’ என்றார்.

Related Stories: