பெரியகுளம்: பெரியகுளம் சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளப்புரம் பகுதியில் வராகநதி ஆற்றில் வேகான் ஓடைப்பகுதியில் தரைப்பாலம் உள்ளது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்த தரைப்பாலம் கடும் சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக விளைபொருட்களை ஏற்றி செல்லும் விவசாயிகள் சிரமத்தித்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த பாலத்தை சீரமைக்க கோரி அப்பகுதிவிவசாயிகள் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை.