நெல்லை: நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு பஸ்சில் கூட்டம் அலைமோதுகிறது. பெண் ஊழியர்கள் நின்று கொண்டு பயணிக்கின்றனர். கடந்த 1ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை, 6வது கட்ட கொரோனா ஊரடங்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நீட்டிப்பின்போது வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்டத்திற்குள் இயக்கப்பட்ட அரசு பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. அரசு ஊழியர்களின் வசதிக்காக மட்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நெல்லையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை மற்றும் மாலை நேரத்தில் அரசு ஊழியர்களுக்காக பஸ்கள் இயக்கப்படுகிறது.