தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே அரும்பாக்கம் கிராமத்தில் பல குடும்பங்கள் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் விநாயகர் சதுர்த்தி விழா நடக்குமா, செய்து வைத்துள்ள விநாயகர் சிலைகள் விற்பனையாகுமா என்று தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே அரும்பாக்கம் கிராமத்தில் களிமண் கொண்டு பலவிதமான கடவுள் சிலைகள், நவராத்திரிக்காக கொலு பொம்மைகளை மண்பாண்டம் தொழில் செய்யும் பல குடும்பத்தினர் செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் செய்தும் வாழ்வாதாரம் ஈட்டி வருகின்றனர். இந்த தொழிலில் 50க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.ஊரடங்கால் சதுர்த்தி விழா கேள்விக்குறி விநாயகர் சிலைகள் விற்பனையாகுமா? மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை
- ஓரத்தங்கல் சதுர்த்தி விழா கேள்வி கணேஷா
- மட்பாண்ட தொழிலாளர்கள்
- உரட்டங்கல் சதுர்த்தி விழா கேள்வி விநாயகர்