கொரோனா தொற்றை எதிர்த்து வெற்றி கொண்டு அமித்ஷா, பன்வாரிலால் புரோகித் விரைவில் நலமடைய வேண்டும்: எடப்பாடி, ஸ்டாலின், ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை: கொரோனா தொற்றை எதிர்த்து வெற்றி கொண்டு அமித்ஷா, பன்வாரிலால் புரோகித் விரைவில் நலமடைய வேண்டும் எடப்பாடி, ஸ்டாலின், ஓபிஎஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விரைவாக கொரோனா தொற்றில் இருந்து, எதிர்த்து வெற்றி கொண்டு விரைவில் நலமடைய வேண்டும். அவர் விரைவில் குணமடைய வேண்டி நாங்கள் எல்லோரும் பிரார்த்திக்கிறோம். அதே போன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்று தாக்குதலில் இருந்து குணமடைய எல்லா வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம். தமிழ்நாட்டின் சார்பில் அவர் உடல் நலம் பூரணகுணமடைய வாழ்த்துகிறோம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி அறிந்தேன். அவர் விரைந்து குணமடைந்து நல்ல உடல்நலனை பெற்றிட வேண்டும் என விரும்புகிறேன்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விரைவில் முழுநலம் பெற்று மீண்டும் தனது நிர்வாக பணிகளில் கவனம் செலுத்த என்னுடைய மனமார்ந்த விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விரைவில் குணமடைந்து பூரண நலம் பெற வேண்டிக்கொள்கிறேன். அதே போன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். அவர்கள் விரைவில் குணமடைந்து தொடர்ந்து பொது வாழ்வில் தங்களது பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: