திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் ஓய்வு பெற்ற கருவூல அதிகாரியின் பாஸ்வேர்டை பயன்படுத்தி மாவட்ட கலெக்டரின் வங்கி கணக்கில் இருந்த அரசு பணம் ₹2 ேகாடிக்குமேல் மோசடி நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் வஞ்சியூரில் சார் கருவூலம் உள்ளது. இந்த கருவூலத்தில் மாவட்ட கலெக்டரின் கணக்கில் இருந்து பணம் மோசடி நடந்துள்ளதாக நிதி துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் மாவட்ட கலெக்டரின் கணக்கில் இருந்த அரசு பணத்தில் இருந்து 2 கோடிக்குமேல் மோசடி நடந்தது தெரியவந்தது.