திருமலை: ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், தாடேபள்ளிக்கூடத்தில் புகைப்பட கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் மாணிக்கயால ராவ். இவர், தாடேபள்ளிக்கூடத்தில் கடந்த 2014 ஆண்டு பாஜக சார்பில் முதல் முறையாக எம்எல்ஏ.வாக வெற்றி பெற்றார். 2014-2018 வரை சந்திரபாபு அமைச்சரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று ஏற்பட்டு விஜயவாடா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தனக்கு கொரோனா வந்தது குறித்து தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து, அதனை சமூக வலைத்தளங்களில் கடந்த ஜூலை 4ம் தேதி வெளியிட்டார்.