சென்னை: சென்னை நகரில் நாளை முழு ஊரடங்கையொட்டி 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.