சிவகங்கை: காரைக்குடியில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகள், குடியிருப்பு இல்லாத புன்செய் பகுதி, மனைவாடகை பகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், மனைவாடகை பகுதிகளை அளவீடு செய்து, பட்டா வழங்குவதற்காக காரைக்குடியில் தனி தாசில்தார் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணிபுரிந்தவர் மகாதேவன்.