கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கான ஊதியத்தை ஒரு வாரத்திற்குள் வழங்குக : உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி : கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கான ஊதியத்தை ஒரு வாரத்திற்குள் வழங்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின் ஊதியம் பிடித்தத்திற்கு எதிரான வழக்கு ஆக. 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே இந்த வழக்கு விசாரணையின் போது , உச்சநீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Related Stories: