லக்னோ: கோர்ட் வளாகங்கள், மெட்ரோ நிலையங்கள், உள்ளிட்ட துறைகளை பாதுகாப்பதற்கு ரூ.1,800 கோடி செலவில் சிறப்பு பாதுகாப்புபடை பிரிவை உருவாக்க உள்ளதாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:உயர்நீதிமன்றம் மாவட்டநீதிமன்றங்கள், வழிபாட்டு தலங்கள், வங்கிகள் மெட்ரோ ரயில் நிலையங்கள் நிர்வாக கட்டடங்கள் மற்றும் மாநிலத்தால் முக்கியமானவையாக கருதப்படும் பல்வேறு நிறுவனங்களின் பாதுகாப்பு பணியை சிறப்பு படை கவனிக்கும். மகாராஷ்டிரா மற்றம் ஒடிசா மாநிலங்களில் செயல்பட்டு வரும் புரோவின்சியல் ஆர்ம்டு கான்ஸ்டாபுலரி போன்று உ.பி.,யிலும் சிறப்பு பாதுகாப்பு படை உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் மாநிலத்தின் காவல்துறை மீதான அழுத்தத்தை குறைப்பதோடு மாநிலத்தில் கூடுதல் வேலை வாய்ப்பையும் உருவாக்கும். இதற்காக ரூ.1,800 கோடி ஒதுக்கப்படுகிறது.
மகாராஷ்டிரா, ஒடிசாவை தொடர்ந்து உ.பி. யிலும் சிறப்பு பாதுகாப்புபடை பிரிவு; ரூ.1,800 கோடி ஒதுக்கி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு
- யோகி ஆதித்யநாத்
- உ.பி.
- ஒடிசா
- மகாராஷ்டிரா
- சிறப்பு பாதுகாப்பு படைகள் பிரிவு
- உ.பி. சிறப்பு பாதுகாப்பு படைகள் பிரிவு