விருதுநகர்: விருதுநகரில் கழிவுநீர் ஓடும் கௌசிகா நதியை தூர் வாரி தடுப்பணை கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்ட காட்டுப்பகுதியில் பெய்து வரும் மழைநீர், விருதுநகர் மாவட்டத்திற்குள் வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு வருகிறது. கண்மாய் நிரம்பி வெளியேறும் நீர் கௌசிகா நதியாக உருவெடுக்கிறது. அக். துவங்கி டிச. வரை பெய்யும் வடகிழக்கு பருவமழையின் போது கௌசிகா நதியில் தண்ணீர் ஓடி குல்லூர்சந்தை அணை, அங்கிருந்து கோல்வார்பட்டி அணை நிரம்பி கடலுக்கு செல்லும்.