லக்னோ: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜையும் அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 200 முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்காக பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்த 16 காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுமா? : அயோத்தி மதகுரு ஒருவருக்கும், விழா பாதுகாப்பு காவலர்கள் 16 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி!!
- விழா
- ராம் கோயில்
- பாதுகாப்பு வீரர்கள்
- மதகுரு
- காவலர்கள்
- அயோத்தி
- ராம் கோயில் அறக்கட்டளை விழா: அயோத்தி பூசாரி