ஆகஸ்ட் 14-ம் தேதி ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை கூடுகிறது?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை கூட்டம் ஆகஸ்ட் 14-ம் தேதி கூட்டப்படும் என முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்ப்பூரில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற காங். சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆக. 14 வரை ஜெய்ப்பூரில் உள்ள தனியார் விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: