காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை!: முழுநேர கட்சி தலைவரை தேர்வு செய்வது குறித்து விவாதம்..!!

டெல்லி: காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் அந்த கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார். டெல்லியில் காலை 11 மணிக்கு காணொலி  காட்சி மூலம் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் சோனியா காந்தி இந்த ஆலோசனையை நடத்தவுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசுகளை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாகவும், குறிப்பாக ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்காக பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது முழுநேர காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போதைய அரசியல் சூழல் மற்றும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் அதுகுறித்தும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

இந்த ஆலோசனையின் போது புதிதாக மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டவர்களும் கலந்துக்கொள்ள உள்ளனர். கடந்த 20ம் தேதி காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாகவே மாநிலங்களவை உறுப்பினர்களுடனான கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: