தருமபுரி: எச்சில், இருமல், தும்மலில் ஏற்படும் நீர் துவாலைகள் மூலம் கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆகவே கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, ஏப்., 16 முதல், மாநகர பகுதிகளில் பொது வெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதனிடையே தருமபுரி மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு முகக்கவசம் அணியாமல், வெளியே வருபவர்கள் மீது, அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை கண்காணிக்க, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.