செய்யூர்: மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரியனூர் ஊராட்சியில் உள்ள காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த 20 வருடத்துக்கு முன் அமைக்கப்பட்ட மின்கம்பிகள் மற்றும் கம்பங்கள் தற்போது சேதம் அடைந்துவிட்டது. பெரும்பாலான வீடுகளின் மாடியை உரசிக்கொண்டு வயர்கள் செல்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மழை பெய்யும்போது ஷாக் அடிக்கிறது. பல பகுதிகளில் கைக்கு எட்டும் தூரத்தில் மின் வயர்கள் தொங்குவதால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. காலனி பகுதியில் உள்ள குடிசை வீடுகள் மீதும் ஒயர்கள் உரசியபடி செல்வதால் மழைக்காலம், காற்று வீசும்போது வயர்கள் உரசி தீப்பொறிகள் ஏற்பட்டு குடிசைகள் எரிந்துவிடுகிறது.