நாகர்கோவில் திமுக எம்.எல்.ஏ சுரேஷ்ராஜனுக்கு கொரோனா

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் வக்கீல் மகேஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் மக்கள் பணிகளில் ஈடுபட்ட நாகர்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ சுரேஷ்ராஜன் கொரோனா

அறிகுறிகள் இல்லாத போதிலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். மேலும் அவர் நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வுக்கு

கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பின்னர் அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: