பரமக்குடி: பரமக்குடி அருகே தெளிச்சத்தநல்லூர் பஞ்சாயத்து பகுதிகளில் அள்ளப்படாத குப்பைகளால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர்.பரமக்குடி நகர் பகுதியையொட்டி உள்ளது தெளிச்சத்தநல்லூர். இந்த பஞ்சாயத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைபில் அமைந்துள்ளதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். சாலையை ஒட்டிய பகுதிகளில் சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் குப்பை நிறைந்து சாலை ஓரங்களில் குவிந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள மாடு, நாய்கள் குப்பைத் தொட்டியில் இருந்து வெளியில் எடுக்கப்படும் குப்பைகளை சிதறி போடுவதால், சாலை ஓரங்களில் குப்பை குவிந்து கிடக்கிறது.